ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை: சாவில் சந்தேகம் என தந்தை புகார்
By DIN | Published on : 14th May 2017 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (25). கடந்த செவ்வாய்க்கிழமை இவரது மனைவியை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கேலி செய்தனராம். இதுகுறித்து தகவலறிந்த வெங்கடேசன் சென்று தட்டிக்கேட்டபோது அவரையும் தாக்கினராம்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வெங்கடேசன் வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வெங்கடேசனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை ராஜ் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் வெள்ளிக்
கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.