வியாபாரியின் கண்கள் தானம்

செய்யாறில் இறந்த வியாபாரியின் கண்கள் வியாழக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.

செய்யாறில் இறந்த வியாபாரியின் கண்கள் வியாழக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.
செய்யாறு சின்ன தெருவைச் சேர்ந்த பெட்டிக்கடை வியாபாரி டி.பிரகாசம் (52). இவர், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை இறந்தார். பிரகாசத்தின் கண்களை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். 
அதன்பேரில், செய்யாறு ரிவர்சிட்டி அரிமா சங்கத்தினர் உதவியுடன் காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவமனைக் குழுவினர் பிரகாசத்தின் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் பி.நடராஜன், திருஞானம், செந்தில், எம்.சண்முகம், புகழேந்தி, தீனதயாளன், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com