திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் செல்ல மகளைக் காப்போம், செல்வ மகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ், மாணவிகள் மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிருஷ்டினா தா.டார்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
மருதம் பள்ளித் தலைமை ஆசிரியர் பூர்ணிமா, மாணவிகள் மன்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
மாவட்டக் கல்வி ஆய்வாளர் குமார், ஆர்.எம்.எஸ்.ஏ. மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவப்பிரகாசம் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.