முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், 1,008 குங்குமார்ச்சனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், தன்வந்திரி மஹா வேள்வி பூஜை நடந்தது.
மாலையில் உத்ஸவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கன்னி மஞ்சள் மாதாம்பிகை அலங்காரத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். விழாவில், வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com