ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இதைத் தொடர்ந்து, ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.
மேலும், மனுக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com