வேட்டவலத்தை அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் மக்கள் திட்ட இயக்க சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா தலைமை வகித்தார். சமூக நலத் துறை விரிவாக்க அலுவலர் மீனா, வேளாண் விரிவாக்க அலுவலர் வெங்கடாச்சலம், ஓலைப்பாடி கூட்டுறவு பால் சங்கத் தலைவர் அப்பாதுரை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை அன்பழகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓலைப்பாடி ஊராட்சிச் செயலர் விஜய கணபதி வரவேற்றார்.
கிராம சபைக் கூட்டத்தில், 2019 - 2010ஆம் ஆண்டுக்கான அனைத்துத் துறை வாரியாக கிராம வளர்ச்சித் திட்ட அமலாக்கம், திட்ட வடிவம் தயாரித்தல், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், வட்டார சுகாதார ஆய்வாளர் தனசேகர், கிராம செவிலியர் தெய்வானை மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.