செய்யாறு தொகுதி வாக்குச் சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி

செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யாறு அரசு பாலிடக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்து, தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியின்போது, வட்டாட்சியர்கள் (செய்யாறு) க.மகேந்திரமணி, (வெம்பாக்கம்) சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உதயகுமார், சுகானந்தம், மண்டல துணை வட்டாட்சியர்கள் மேனகா, முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தனர்.
இதில், செய்யாறு, வெம்பாக்கம் மண்டல துணை வட்டாட்சியர், அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் என 402 பேர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 305 பேர் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com