கீழ்பென்னாத்தூரில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (71). இவர், கடந்த 8-ஆம் தேதி கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் வந்த பைக் அண்ணாமலை மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.
இதனால் பலத்த காயமடைந்த அண்ணாமலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு அண்ணாமலை சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.