போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கௌரி வரவேற்றார்.
முகாமில், பயனாளிகளுக்கு தோராயப் பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் அளித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.