வேட்டவலம், நடுத் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி மகாசிங்கம் (61). இவர், வியாழக்கிழமை வேட்டவலம் பெரிய ஏரிக்கரை - பிடாரன்கொட்டாய் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.