திருவண்ணாமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர்.
திருவண்ணாமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் வெள்ளிக்கிழமையும், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையும் நடைபெற்றன. இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட 11 பேர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற 11 பேரும் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலர் வி.சிவக்குமார், துணைச் செயலர் எல்.என்.துரை, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் அருள்பழனி, துணைத் தலைவர் ரேடியோ எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் பி.சுனில்குமார், திருவண்ணாமலை நகர்ப்புற கூட்டுறவு வங்கித் தலைவர் டிஸ்கோ குணசேகரன், நகர துணைச் செயலர் அரசப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.