மாநில மல்லர் கம்பம் போட்டி: சண்முகா கல்லூரி சிறப்பிடம்

மாநில அளவிலான மல்லர்கம்பம் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

மாநில அளவிலான மல்லர்கம்பம் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
மாநில அளவிலான 9-ஆவது மல்லர்கம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கிருஷ்ணகிரி எம்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மல்லர்கம்பம் குழுப் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்தனர்.
இதேபோல, கல்லூரியின் மாணவிகள் குழுவினர் கலந்து கொண்டு, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தனர். தனிநபர் போட்டியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு மாணவி கே.அருள்சொல்தேவி மாநில அளவில் 4-ஆம் இடம் பிடித்தார்.
போட்டிகளில் வென்று பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலரும், தாளாளருமான எம்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், உடல் கல்வி இயக்குநர் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் பேராசிரியர்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com