வேன் மோதியதில் இளைஞர் சாவு

சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தில் சனிக்கிழமை பைக் மீது வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தில் சனிக்கிழமை பைக் மீது வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் சந்தை மேட்டுத் தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி செல்வம் மகன் அஜித்குமார் (21). இவர், வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் சந்தைமேடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அஜித்குமார் மீட்கப்பட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com