நாட்டறம்பள்ளியில் மூதாட்டியின் வீடு புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூசன்மேடு பகுதியைச் சேர்ந்த சாமுடியின் மனைவி சின்னத் தாய் (75). குடும்பத்தினருடன் வசித்து வரும் இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு, வீட்டுக்கு வெளியே தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவைத் திறந்து, அதில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கம்மல் உள்பட 8 பவுன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு, அறையில் இருந்த இரும்புப் பெட்டியில் இருந்த துணிமணிகள் மற்றும் பத்திர ஆவணங்களையும் எடுத்துச் சென்று, அதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.