விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள்

நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழாவும்,  சனிக்கிழமை (செப்டம்பர் 15) விநாயகர்

நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழாவும்,  சனிக்கிழமை (செப்டம்பர் 15) விநாயகர் விஜர்சன ஊர்வலமும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளுர் ஏரி, கூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com