திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை அமைச்சர் சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.36 லட்சத்தில் 
கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை அமைச்சர் சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இறையன்பர்கள், ஆதரவற்ற முதியவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் மதிய உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில், 2015 - 16ஆம் நிதியாண்டில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.36 லட்சத்தில் அன்னதானக் கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், அன்னதானக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி 
எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, அன்னதானக் கூடத்தை திறந்து வைத்து இறையன்பர்கள், முதியோர்களுக்கு உணவு பரிமாறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் ஆணையர் இல.செந்தில்வேலன், திருவண்ணாமலை உதவி ஆணையர் சு.மோகனசுந்தரம், செயல் அலுவலர் உபேஷ்குமார், ஆய்வாளர்கள் மேகலா, நந்தகுமார், நடராஜன், முன்னாள் எம்எல்ஏ குணசீலன், அதிமுக நிர்வாகிகள் 
டி.கே.பி.மணி, எஸ்.ரவிச்சந்திரன், எம்.மகேந்திரன், பச்சையப்பன், டி.பி.துரை, கே.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com