திருவண்ணாமலையில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி: 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி தொடக்கி வைத்தார். கிரிவல பாதை, சீனுவாசா மேல்நிலைப் பள்ளி எதிரே நிறைவடைந்த சைக்கிள் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனியே 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கு திருவண்ணாமலை தாலுகா காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பரிசு, சான்றுகளை வழங்கினார். இதில், உடல் கல்வி ஆய்வாளர் ஏ.முனியன், மாவட்ட கையுந்துபந்து பயிற்சியளர் முனுசாமி
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com