கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்! 15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

கல்லூரியில் 175 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 175 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 9:52 am IST

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 175 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 175 மாணவ, மாணவிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 
விழாவில், கல்லூரி கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், துணை முதல்வர் கே.அண்ணாமலை, கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும், உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான எம்.கோபு மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.