கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 04th April 2019 09:56 AM | Last Updated : 04th April 2019 09:56 AM | அ+அ அ- |

போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாணபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாலை 4.30 மணி முதல் 6 வரை நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கோயிலில் உள்ள நந்திக்கும், மூலவர் ஸ்ரீகல்யாணபுரீஸ்வரருக்கும் பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த பூஜையில் போளூர், வசூர், பேட்டை, காங்கேயனூர் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.