அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடுகனூர், மேல்நகரம்பேடு, கொருக்காத்தூர், சீசமங்கலம், முனுகப்பட்டு, பில்லாந்தி உள்ளிட்ட கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை ஆதரித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது, செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், மாநில பாமக துணைப் பொதுச் செயலர்ஆ.வேலாயுதம், மாவட்ட பாமக செயலர் கலைமணி, ஒன்றிய அதிமுக செயலர் பி.ஆர்.ஜி.சேகர், நகர பேரவைச் செயலர் பாரி பாபு, புதிய நீதிக் கட்சியின் மாவட்டச் செயலர் ஜெயக்குமார், ஊராட்சி முன்னாள் தலைவர் எல்லம்மாள் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.