ஆரணி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான ஜி.செந்தமிழனுக்கு முதலியார் முன்னேற்றச் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
அந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.தியாகராஜன், அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழனை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரணியைச் சேர்ந்த அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன், இந்தப் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியதாலும், முதலியார்கள் சமூகத்துக்கு உரிய மரியாதை வழங்கியதாலும் எங்களது ஆதரவைத் தெரிவித்தோம் என்றார் அவர்.