திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜீனியரிங் கல்லூரி சார்பில், முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கான ஆங்கில மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிப் பதிவாளர் இரா.சத்தியசீலன், கல்லூரி முதல்வர் இர.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் என்.அருள்தாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு "சொல்லாட்சிக்கான அமைப்பு' என்ற மையத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆங்கில மொழித் துறை உதவிப் பேராசிரியர் இதயத்கான், கல்லூரித் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.