கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு புளூடைமன் கிரிக்கெட் அகாதெமியின் செயலரும், பயிற்சியாளருமான ஏ.கே.ராஜேஷ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சபரி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து மாணவ - மாணவிகளுக்கு 
அறிவுரை வழங்கிப் பேசினார்.
விழாவில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், புளூடைமன் கிரிக்கெட் அகாதெமியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com