திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் விடு
முறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் வரப் பெற்றன. அரசின் உத்தரவுப்படி, மாணவ - மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும். விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவ - மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவர்.
எனவே, தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் கண்டிப்பாக சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தெரிய வந்தால் 87542 52452 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.