செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) ஆ.மூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019 - 20ஆம் கல்வியாண்டில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.சி.ஏ, பி.காம்., போன்ற இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் (ஏப்.22) வழங்கப்பட உள்ளன.
கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி மற்றும் எஸ்.சி(ஏ) பிரிவுகளைச் சேர்ந்த
மாணவர்கள் ஜாதிச் சான்று சமர்ப்பித்து ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 6 என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.