திருவண்ணாமலை நகர உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார், சந்திரமோகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள மாம்பழ மண்டிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கார்பைட் கற்களை வைத்து மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த 250 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர். தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.