மின் சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
  கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். செயலர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஏ.கலைவாணி வரவேற்றார்.
  தமிழ்நாடு மின்வாரிய வந்தவாசி கோட்ட செயற்பொறியாளர் எம்.ரவிராஜன், உதவி செயற் பொறியாளர் டி.நாராயணன், இளநிலை பொறியாளர் எஸ்.பழனி ஆகியோர் மின் சிக்கனம், மின் பொருள்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறினர்.
  கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கி.வரலட்சுமி, இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் சுஜாதா 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com