வேட்டவலம் ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீமனோன்மணி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, வேட்டவலம் ஜமீன்கள் மகேந்திரன், சம்பத்குமார், லலித்குமார் ஆகியோர் தலைமையில் அம்மனுக்கு காப்பு அணிவித்தல் விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது.
தொடர்ந்து, ஸ்ரீமனோன்மணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருவிளக்குப் பூஜை, சுமங்கலி பூஜைகளும் நடைபெற்றன.
இரவு வாணவேடிக்கை முழங்க, மேள-தாளங்களுடன் உற்சவர் ஸ்ரீமனோன்மணி அம்மன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.