உழவர் பாதுகாப்புத் திட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 09th August 2019 10:01 AM | Last Updated : 09th August 2019 10:01 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், உழவர் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் என்.குமார் தலைமை வகித்தார். கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், துணை முதல்வர் கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் டி.செந்தில்குமார் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் வில்லியம் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழக அரசு செயல்படுத்தும் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகையைப் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
துணை வட்டாட்சியர் சாப்ஜான், கல்லூரி மாணவ-மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில், மேலத்திக்கான் கிராம நிர்வாக அலுவலர் பால
முருகன், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.