ஆரணி காணிக்கை அன்னை ஆலயப் பெருவிழா தொடக்கம்

ஆரணி கார்த்திகேயன் சாலையில் அமைந்துள்ள புனித அற்புத காணிக்கை அன்னை ஆலயத்தில் 134-ஆவது ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ஆரணி கார்த்திகேயன் சாலையில் அமைந்துள்ள புனித அற்புத காணிக்கை அன்னை ஆலயத்தில் 134-ஆவது ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, ஜெபமாலை ஊர்வலம், மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, வேலூர் ஆர்.சி.எம். பள்ளித் தாளாளர் எஸ்.கிளமண்ட்ரோசாரியோ தலைமை வகித்து, பெருவிழாவுக்கான கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராய்லாசர், யுஜினிபாத்திமா மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொணடனர். பெருவிழாவையொட்டி, வரும் 17-ஆம் தேதி தேர் பவனி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com