திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு சுதந்திர தினமான வரும் 15-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-ன்படி, சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாள் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.