பையூர் மாரியம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம்

ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாகச் சுமந்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாகச் சுமந்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பையூர் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், ஊர் கூடி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக சுமந்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவைச் சேர்ந்த ஆனந்த், சரவணன், கணேசன், மணி, ஆறுமுகம், கபாலி, ஜெய், ரகு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com