சில்லறை வணிக உரிமை காக்க சுதேச எழுச்சி பயணமாக திருச்சி நோக்கி, ஆரணியில் இருந்து வணிகர் சங்க பேரவையினர் புதன்கிழமை ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஆரணி நகர காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட வணிகர்கள், நகரம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு திருச்சி நோக்கிச் சென்றனர்.
இதில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் எல்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.எச்.பக்ருதீன்அலிஅகமது, பொருளாளர் ஏ.எம்.முருகானந்த், நிர்வாகிகள் வி.கே.ஷர்மா, வி.நடராஜமுதலியார், டி.எச்.குருராஜாராவ், அக்பர்பாஷா, கே.சிவக்குமார், என்.தாமோதரன், சுந்தரேசன், கிஷோர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.