தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தூய்மை இந்தியா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கே.ஆர்.நரேந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு, வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அரிதாஸ் முன்னிலை வகித்தார்.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி வழியாக ஐந்து கண் பாலம் வரை சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மண்டல துணை வட்டாட்சியர் குமரவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், கனகராஜ், கிராம உதவியாளர் கணபதி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏ.கலைவாணி மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com