நீர்நிலை பாதுகாப்பு:  கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட அந்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜல்சக்தி அபியான் திட்ட மூலம்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை தலைமையில் பீம் வெற்றிக் குழு மாணிக்கம் கலைக் குழுவினர்களின் கலை நிகழ்ச்சியுடன், நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு இசை, கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
செங்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் நீர்நிலைகள் குறித்த தலைப்பில் பேசினர். 
தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் சுந்தரவானம், வின்சென்ட், சத்தியகுமார் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com