ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சேர்ந்த 123 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 59 பயனாளிகளுக்கும், மேற்கு ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளுக்கும் என மொத்தம் 123 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பண்டகசாலை மாவட்டத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ப.திருமால், புங்கம்பாடி பி.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசன், சீனிவாசன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.