கடலாடி - செங்கம் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சி சார்பில், கடலாடி - செங்கம் சாலையில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சி சார்பில், கடலாடி - செங்கம் சாலையில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலாடி - செங்கம் சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கொய்யா, இலுப்பை, வேம்பு, மா, புளி, புங்கன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. சமூக ஆர்வலர் ஜெகந்நாதன், ஊராட்சிச் செயலர் செந்தில் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com