கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சி சார்பில், கடலாடி - செங்கம் சாலையில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலாடி - செங்கம் சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கொய்யா, இலுப்பை, வேம்பு, மா, புளி, புங்கன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. சமூக ஆர்வலர் ஜெகந்நாதன், ஊராட்சிச் செயலர் செந்தில் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.