போளூரில் பைக்கை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் போளூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போளூர் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் சுகுமார் (என்ற) சூரியா (20) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக்குக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சூர்யாவை கைது செய்ததுடன், அவர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.