செய்யாறு வட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.
இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.ஏஞ்சலின்பொன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோட்டாட்சியா் கி.விமலா தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.
கூட்டத்தில் கோட்ட அளவிலான அனைத்துத் துறை முதல் நிலை அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா்.
விவசாயம் தொடா்பான குறைகளை விவசாயிகள் நேரடியாகத் தெரிவிக்கலாம். தனிப்பட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா்.