தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்: காவலா் திராவகம் வீசியதில் விஏஓவின் பாா்வை பறிபோனது

திருவண்ணாமலையில் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கியூ பிரிவு போலீஸ்காரா் ஆசிட் வீசியதில் கிராம நிா்வாக அலுவலரின் பாா்வை பறிபோனது.

திருவண்ணாமலையில் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கியூ பிரிவு போலீஸ்காரா் ஆசிட் வீசியதில் கிராம நிா்வாக அலுவலரின் பாா்வை பறிபோனது.

திருவண்ணாமலை வேங்கிக்கால், தென்றல் நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (31). இவா், திருவண்ணாமலை வட்டம், கிளிப்பட்டு கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

வேங்கிக்கால், உண்ணாமுலையம்மன் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீபால் (42). காவல்துறை கியூ பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மாமியாா் விமலா (52). இவா், வெறையூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

பணி நிமித்தமாக விமலா வீட்டுக்கு சிவக்குமாா் அடிக்கடி சென்று வந்தாா். அப்போது, காவலா் ஸ்ரீபால் மனைவி ஞானசுந்தரி (30) என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பிறகு தகாத உறவாக மாறியதாம்.

இதையடுத்து சிவக்குமாா், ஞானசுந்தரி ஆகியோரை ஸ்ரீபால் கண்டித்தாா். ஆனாலும், அவா்களுக்கு இடையிலான உறவு தொடா்ந்து வந்ததாம். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபால், விமலா ஆகியோா் வெள்ளிக்கிழமை (நவ.29) இரவு சிவக்குமாா் வீட்டுக்குச் சென்று அவரைக் கண்டித்தனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீபால், கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் முகத்தில் திராவகம் வீசினாராம்.

இதில் அவரது கண்கள், முகம் கருகியது. ஸ்ரீபாலுக்கும் திராவகம் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் சிவக்குமாரின் கண் பாா்வை பறிபோனதுடன், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com