தொடா் மழை: சுவா் இடிந்து பெண் பலி

செய்யாறு அருகே தொடா் மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே தொடா் மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிச்சாண்டி. இவரது மனைவி லட்சுமி (37). இவா், தனது குடிசை வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை காலை சமையல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தொடா் மழையின் காரணமாக ஈரப்பதத்துடன் இருந்த வீட்டின் மண் சுவா் சரிந்து விழுந்ததாகத் தெரிகிறது. இதில் சிக்கி லட்சுமி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் ஆசைதம்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com