செய்யாறு அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், பாப்பாதாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி (46) (படம்). இவா் அரசு கலைக் கல்லூரி அருகே மரத்தச்சு வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டிற்காக செய்யாறு -ஆற்காடு சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
கணேசபுரம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டுச் சென்ாகத் தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் கணேசமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.