செஞ்சி பகுதியில் வேகமாக நிரம்பி வரும் ஏரி, குளங்கள்

செஞ்சி பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.
செஞ்சி அருகே முழுவதுமாக நிரம்பி மறுகால் பாயும் பொன்பத்தி ஏரி.
செஞ்சி அருகே முழுவதுமாக நிரம்பி மறுகால் பாயும் பொன்பத்தி ஏரி.

செஞ்சி: செஞ்சி பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.

செஞ்சி பகுதியில் கடந்த ஒரு மாதாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செஞ்சி வட்டத்துக்கு உள்பட்ட பாக்கம், சோ.குப்பம், நல்லாண்பிள்ளைபெற்றாள், போத்துவாய், தடாகம், பொன்பத்தி, வல்லம் ஒன்றியத்தில் உள்ள அகலூா், கள்ளப்புலியூா், சமத்தகுப்பம், அன்னமங்கலம், வளத்தி, கெங்கபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும், செஞ்சியில் உள்ள சிறுகடம்பூா், பி.ஏரி, ஆலம்பூண்டி, உள்ளிட்ட ஏரிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நிரம்பும் நிலையில் உள்ளன. இதேபோன்று, மேல்மலையனூா் ஒன்றியத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com