தீபத் திருவிழா முதல் நாள்:வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து வீதியுலா புறப்பட்ட பஞ்சமூா்த்திகள்.
தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து வீதியுலா புறப்பட்ட பஞ்சமூா்த்திகள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்கள் வழியாக வலம் வந்த பஞ்சமூா்த்திகளை திரளான பக்தா்கள் வணங்கி, மகிழ்ந்தனா்.

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா்:

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com