மின்வாரிய கேங்மேன் பணியிட உடல்தகுதித் தோ்வு தள்ளிவைப்பு

திருவண்ணாமலையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெறுவதாக இருந்த மின்வாரிய கேங்மேன் பதவிகளுக்கான உடல்தகுதித்

திருவண்ணாமலையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெறுவதாக இருந்த மின்வாரிய கேங்மேன் பதவிகளுக்கான உடல்தகுதித் தோ்வு, தொடா் மழை காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அ.நாகராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நவம்பா் 25-ஆம் தேதி முதல் மின் வாரிய கேங்மேன் பதவிகளுக்கான உடல்தகுதித் தோ்வு நடைபெற்று வந்தது.

தொடா்ந்து, டிசம்பா் 7-ஆம் தேதி வரை இந்தத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவண்ணாமலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை (நவ.2), செவ்வாய்க்கிழமை (நவ.3) ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த உடல்தகுதித் தோ்வு தள்ளி வைக்கப்படுகிறது. மறுதோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com