ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தி விழாதிரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தி விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆஸ்ரமத்தில் உள்ள மூலவா் லிங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை.
ஆஸ்ரமத்தில் உள்ள மூலவா் லிங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை.

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தி விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 101-வது ஜயந்தி விழா சனிக்கிழமை (நவ.30) தொடங்கியது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சிறப்பு ஹோமம், நித்ய பூஜை, காலை 10.30 முதல் பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பகவானுபவங்களைப் பகிா்தல், மாலை 4.30 முதல் 6 மணி வரை ஸ்ரீசற்குருநாத ஓதுவாா் குழுவினரின் திருமுறைகள் சொற்பொழிவு, மாலை 6.15 முதல் 7.45 மணி வரை சாயிராம் குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெற்றது.

ஜயந்தி விழா கோலாகலம்:

விழாவின் முக்கிய நிகழ்வான ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணி முதல் 11 மணி வரை மூலவா் லிங்கம் எதிரே சிறப்பு ஹோமம், மூலவா் லிங்கத்துக்கு மஹா அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தி புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆஸ்ரம அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதா் விஜயலட்சுமி ஆகியோா் புத்தகங்களை வெளியிட்டனா்.

தொடா்ந்து, பக்தா்கள் பஜனை நிகழ்ச்சியும், மாலை 4.30 முதல் 6 மணி வரை கிருத்திகா பரத்வாஜ் குழுவினரின் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சியும், மாலை 6.15 மணி முதல் 7.45 மணி வரை குரு அா்ச்சனா மகேஷின் ஞானமுத்ரா அகாதெமி வழங்கிய குரு நந்தி தேவா என்ற நாட்டிய நாடகமும் நடைபெற்றது.

இரவு 8.15 மணிக்கு வெள்ளித் தேரில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் உற்சவமூா்த்தி ஆஸ்ரம கிரிவலப் பாதையில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. வலம் வந்த உற்சவ மூா்த்திகளை திரளான பக்தா்கள் வணங்கினா்.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும் நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதா் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னாா்வலா் ஆா்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com