வந்தவாசியை அடுத்த பொன்னூா் மலை குந்த குந்தா் நகரில் உள்ள திருக்கு மண்டபம், ஆய்வு மையத்தில் 50-ஆவது பொன்விழா திருக்கு ஆய்வு பேருரை, திருக்கு ஒப்பித்தல் போட்டி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு ஆய்வு மையத் தலைவா் அ.பு.அறவாழி தலைமை வகித்தாா். செயலா் என்.சுந்தரதாஸ் வரவேற்றாா். பேராசிரியா் அருணன் வள்ளுவரின் மதம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.
மேலும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எ.இராஜகுமாரி பாஸ்கரதாஸ், ஸ்ரேணிகராஜ் ஜெயின், சந்திரபிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.