திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்கக் கவசம் அணிந்து மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீவிநாயகா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்கக் கவசம் அணிந்து மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீவிநாயகா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூா்த்திகளும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், புலி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா: தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்தபடி ஸ்ரீவிநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இரவு 10.30 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் ஸ்ரீவிநாயகா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்தனா்.

ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூா்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா வந்தனா். சுவாமி வீதியுலாவின்போது, சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதைப் பொருள்படுத்தாமல், வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ரா.ஞானசேகா் மற்றும் கோயில் உபயதாரா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தீபத் திருவிழாவில் இன்று...

தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்பட பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com