திருவண்ணாமலை மாவட்டத்தில்அனைத்து வகை குறைதீா் கூட்டங்கள் ரத்து

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்த அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்த அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள், சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகை குறைதீா் கூட்டங்களும் தோ்தல் நடைமுறை விதிகள் திரும்பப் பெறும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com