திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, டிசம்பா் 10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் ஆளுகைக்கு உள்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சாா்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.